We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Friday, November 30, 2018

எலுமிச்சம் பழம்


எலுமிச்சம் பழத்தை   மாந்திரீகத்திற்கு   ஏன்   பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா?






இன்றைய காலகட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட எலுமிச்சம் பழ வகைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நமக்கு தெரிந்ததும் நாம் பயன்படுத்துவதும் இரண்டு வகைகள்தான். ஒன்று நாட்டு எலுமிச்சம் பழம் மற்றொன்று கொடி எலுமிச்சம் பழம்.

எலுமிச்சம் பழத்தை சர்பத் போட்டு குடிப்பதும் ஊறுகாய் போடவும் பல வகைகளில்  உணவாக பயன்படுத்துவதையும் நாம் அறிந்ததே மேலும் வைத்தியத்திற்கு பயன்படுத்துவதையும் நாம் அனைவரும்  நன்கு அறிந்த விசயம்தான்.

அடுத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்துவதில் எலுமிச்சம் பழத்திற்கே முதலிடம் எலுமிச்சம் பழத்தை திருஸ்டி களிக்கவும் மற்றும் மந்திர தந்திர வேலைகளுக்கும்  பயன்படுத்துவதையும் நாம் அனைவரும் அறிந்ததே ஆனால்  எலுமிச்சம் பழத்தை மட்டும் ஏன் பயன்படுத்துகின்றனர்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். உலோகங்களுக்கு மட்டும்தான் மந்திரங்களை உள்வாங்கும் சக்தி உண்டு அதுவும் குறிப்பாக தங்கம் வெள்ளி செம்பு இந்த மூன்று உலோகங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இன்னம் கொஞ்சம் விபரமாகவே சொல்கிறேன்.  யந்திரம் மற்றும் தாயத்து பற்றி நீங்கள் அறிந்ததுதான். இவை இரண்டையும் உலோக தகடுகளில் மந்திரங்களை உரு ஏற்றி செய்கின்றனர். தங்க தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் நீண்ட காலம் பயன்படுத்த முடியும் என்றும் வெள்ளி தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் தங்கத்தைவிட குறைவான காலமும்.  செம்பு தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால்  தங்கம் மற்றும் வெள்ளியைவிட குறைவான காலம்தான் மந்திரங்கள் பயன்தருமாம். உலோகத்திற்கும் மந்திரத்திற்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும்.

எலுமிச்சம்பழத்தில் செம்பு சத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால்தான் மந்திர தந்திர வேலைகளுக்கு எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துகின்றனர். என்பது இப்போது புரிந்திருக்கும்.









Share:

Saturday, April 28, 2018

Can You Turn Lead into GOLD?

Can You Turn Lead into GOLD?




         இந்த வீடியோவை பார்த்திருப்பீர்கள் இதுதான் தற்போதைய அறிவியல் இது இந்த வீடியோவில் சொல்வது எந்த அளவு சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நமது தமிழ் இரசவாத அறிவியலின் பெருமை  புரியும்படி விரைவில் நான் கூறுவேன். விரைவில் என்றதும் உடனே எதிர் பார்க்கவேண்டாம் இது எளிதான காரியம் அல்ல அதற்கு கால தாமதம் ஆகும். 



Share:

Turn Lead into Gold!


Turn Lead into Gold! || MinuteLaboratory #4





Share:

Sunday, April 8, 2018

MERCURY LINGAM

சுமார் 11 கிலோ எடையுள்ள பாதரச லிங்கம்

சுமார் 1 கிலோ எடையுள்ள பாதரச லிங்கம்

Share:

MERCURY NANTHI

பாதரச நந்தி

Share:

இரசமணி

இரசமணி 

 ஒரு மணி சுமார் 10 கிராம் எடை



Hover over the image:

Pineapple
Share:

Saturday, April 7, 2018

இரசவாதம்

இரசவாதம்

''உப்பை யறிந்தவ னேவா திசகத்
  துப்பை யொழிந்த வனே யோகி
  தப்பிலை யேபூமி நாத மகிமையைச்
  சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே!
  வீட்டி லிருக்குதொரு மூலம் வெளிக்
  காட்டிலிருக்கு திருமூலம்
  மாட்டி லிருக்கும் பெரியோர்க்கு
  ரசவாதமி தல்லவோ ஞானப்பெண்ணே!''

                               -மதுரை வாலைசாமி ஞானக்கும்மி.
Share:

வாத யோகம்

வாத யோகம்
"உண்ணவே மவுனரச வாத யோகம்
  உத்தமனே வானிரச வாத தாது
  விண்ணுறையும் யோகரச வாதத்திற்கு

  விந்து நாதப் பொருளை விளம்பக்கேளு
  தன்னிரையும் தாது ரசவாதத்திற்குச்
  சதுரான லவணமதே விந்து நாதம்
  பண்ணரிய விரண்டிற்கும் பேரொன்றாகும்
  பாடையினாலுவமானம் பற்றி பாறே
  பாரப்பா விரண்டிற்கு மொரு பேரிட்டு
  பாடினா ருவமானப் பாடையாலே
  வாரப்பா தாது விந்து வழலைக்கும் பேர்
  மவுனமென்ற வாசியோக வாழ்க்கைக்கும் பேர்
  ஆரப்பா விதையெடுத்ததிலே சொல்வார்
  அதையெடுத்ததில் புகட்டியது வாமென்பர்
  கூறப்பா நாதவிந்து முடித்த பேர்க்குக்
  கூச்சமற்ற ஞானமெனும் பொருள் தான்வாய்க்கும்
  சாரப்பா லவணவிந்துபூமி நாதம்
  
  தமையறிந்து முடித்தவர்க்கு தங்கமாமே"
--(அகத்தியர் பரிபாஷை திரட்டு 500--முதல் காண்டம்)


Share:

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதமும் மூலிகையும்

     இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம். 

1.ஓரிதழ் தாமரை      -    கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை         -    பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு             -     இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி        எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை           -    வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி       -    பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.
Share:

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்
              
         இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.

1.அஞ்சனக்கல்                                     -   அயத்தைப் பற்பமாக்கும்.
2.அப்பிரகம்                                                          -   பாதரசத்தைக் கட்டும்.
3.அரிதாரம்                                           -     வங்கத்தை நீற்றும், கட்டும்.
4.கற்கடக சிங்கி பாஷாணம்            -     நாகத்தை செந்தூரமாக்கும்.
5.கல்பாஷாணம்                          -  காரீயத்தைக் கட்டும்.
6.கார்முகில் பாஷாணம்                  -   அரிதாரத்தைக் கட்டும்.
7.கெந்தி பாஷாணம்                          -   இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.
8.கோளக பாஷாணம்                       -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.
9.கௌரி பாஷாணம்                         -   சூதத்தை செம்பாக்கும்.
10.சங்கு பாஷாணம்                          -   சூதத்தை செம்பாக்கும்.
11.சிலாமத பாஷாணம்               -   செம்பை வெள்ளியாக்கும்.
12.பாதரசம்                                -  காந்தத்தை ஈயமாக்கும்.
13.தாளம்பக பாஷாணம்                -    நாகத்தை தங்கமாக்கும்.
14.துத்தம்                                           -  தாளகத்தை வெள்ளியாக்கும்.
15.தொட்டி பாஷாணம்                   -   நாகத்தைச் செம்பாக்கும்
16.மனோசிலை                                -   ரசத்தைக் கட்டும்.
17.இலிங்கம்                                     -  செந்தூரத்திற்கு ஆதி.
18.வீரம்                                              -  காரீயத்தைச் செம்பாக்கும்.
19.வைக்கிராந்தப் பாஷாணம்      -  நவலோகங்ளையும் நீற்றும்.
20.அயத்தொட்டிப் பாஷாணம்     -   களங்குகளுக்கு ஆதி.
21.இரசித பாஷாணம்                -    நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.
22.காக பாஷாணம்                         -    தாரத்தை கறுப்பாக்கும்.
23.கெந்தக பாஷாணம்             -  ரசத்தை செந்தூரமாக்கும்.
24.சவ்வீரம்                             -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.
25.துத்தம்                                        -   தாரத்தை நீற்றும்.
26.நாக பாஷாணம்                       -  நாகத்தை தங்கமாக்கும்.
27.நீலக்கல் பாஷாணம்              -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.
28.மிருதார் சிங்கி                   -   இரசத்திற்கு ஆதி.
29.வெள்ளைப் பாஷாணம்         -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.
30.வங்க நீரால்                              -  கெந்தகத்தைக் கட்டலாம்.
31.கருவங்க நீரால்                       -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.


Share:

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்.

1.துரிசு                                                 -   இரசத்தைக் கொல்லும்.
2.பொன் நிமிளை                             -   தங்கத்தை சுண்ணமாக்கும்.
3.கஞ்ச நிமிளை                               -   வெண்கலத்தை சுண்ணமாக்கும்.
4.உலோக நிமிளை                         -    இரும்பை குருவாக்கும்.
5.காக நிமிளை                                  -    தராவைச் சுண்ணமாக்கும்.
6.முத்துச் சிப்பி                                 -    நவச்சாரத்தைக் கட்டும்.
7.அஞ்சனக்கல்                                 -    சரக்கெல்லாம் ஈயமாக்கும்.
8.இராசவர்த்தக்கல்                        -    நவலோகத்தை வேதையாக்கும்.
9.நண்டு                                                -    சூதத்தைக் கட்டும்.
10.கிளிஞ்சல்                                      -   வங்கம் பாஷாணம் முதலியவைகளின் 
                                                                      தோசத்தைப் போக்கும்.
11.யானைக் கொம்பு                        -   வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.
12.பன்றிக் கொம்பு                            -   வீரம் குருவாகும்.
13.மாட்டுக் கொம்பு                          -   பாஷாணம் செந்தூரமாகும்.
14.முத்து                                               -   இரசத்தை மணியாக்கும்.
15.பவளம்                                             -   இரசத்தை ஏமமாக்கும்.
16.சூடாலைக்கல்                              -   நவலோகங்கள் செந்தூரமாகும்.
17.மஞ்சட்கல்                                     -   கெந்தகம் செம்பாகும்.
18.மாக்கல்                                           -   தாளகம் ஈயமாகும்.
19.சிலாவங்கம்                                  -   பாஷாணம் பற்பமாகும்.
20.அன்னபேதி                                    -   இலிங்கம் மெழுகாகும்.
21.சொர்ணபேதி                                 -   நவலோகத்தையும் தண்ணீராக்கும்.
22.உவர்மண்                                       -   தாது பற்பமாகும்.
23.கருமணல்                                      -   தங்கத்தை குருவாக்கும்.
24.செம்மண்                                        -   காரீயம் செம்பாகும்.
25.சுத்தமண்                                        -    அயம் செம்பாகும்.
26.பன்றி முள்                                     -   இரசம் வெண்மையாகும்.
27.எலி முள்                                        -    வீரம் செம்பாகும்.
28.மீன் எலும்பு                                  -    கௌரி பாஷாணம் ஈயமாகும்.
29.முள் சங்கு                                     -   வெள்ளை ஈயமாகும்.
30.நாகப்பச்சை                                   -    உருக்கு செம்பாகும்.
31.மரகதப் பச்சை                             -   அயம் செம்பாகும்.
32.வெள்ளை சுக்கான் கல்             -   வெள்ளீயம் வெள்ளியாகும்.
33.காகச் சிலை                                  -    காந்தம் செம்பாகும்.
34.மந்தாரச் சிலை                            -    சூடன் செம்பாகும்.
35.சாலக் கிராமம்                              -    தங்கம் செம்பாகும்.
36.மாந்துளிர் கல்                              -    கெந்தகம் செம்பாகும்.
37.முட்டை                                           -    வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.
38.கற்களி                                              -    வெள்ளீயம் செம்பாகும்.
39.செம்பு மணல்                                -    சவ்வீரம் செம்பாகும்.
40.நாக மணல்                                     -    இரசம் செம்பாகும்.
41.காரீய மணல்                                 -    இலிங்கம் செம்பாகும்.
42.உலோக மணல்                             -    மனோசிலை செம்பாகும்.
43.கடுஞ்சுக்கான்                                 -    குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.
44.நாகச்சிலை                                     -     நவலோகம் செந்தூரமாகும்.
45.ஏம சிலை                                         -    பாஷாணங்கள் செந்தூரமாகும்.
46.காரியச் சிலை                                -     பச்சை கற்பூரம் செம்பாகும்.
47.வெண்கலச் சிலை                        -     வெடியுப்பு செம்பாகும்.
48.செம்புச் சிலை                                 -    கல்லுப்பு செயமாகும்.
49.ஆட்டுக் கொம்பு                              -    உப்பெல்லாம் சுண்ணமாகும்.

Share:

இரசமணி

இரசமணி


"வெந் தணலில் ரசம்வைத்து ஐந்து லோகத்தையும்
  வேதித்து விற்றுண்ணலாம்
  வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்

  விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
  சந்ததமும் இளமையோ டிருக்கலாம்
  மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்.
"

                                                                               - தாயுமானவர்

Hover over the image:

Pineapple
Share:

Friday, March 9, 2018

இரசவாத இரகசியங்கள் ஏழு

 இரசவாத இரகசியங்கள் ஏழு 


1.குற்றமில்லாத சிவப்பு நிற இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால் தங்கம் உண்டாகும்.

2.குற்றமுள்ள இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால் செம்பு உண்டாகும்.              

3.குற்றமுள்ள இரசம் சிறு அளவிலும் குற்றமுள்ள கெந்தி பெரு அளவிலும் சேர அயமுண்டாகும்.

4.குற்றமுள்ள இரசம் பெரிதும், குற்றமுள்ள கெந்தி சிறிதும் சேர வெள்ளீயமுண்டாகும்.

5.குற்றமுள்ள இரசம் அதிகமாகவும், அதை விடக் குற்றம் அதிகமுள்ள கெந்தி குறைவாகவும் சேர காரீயம் உண்டாகும்.

6.குற்றமுள்ள இரசமும், அதைவிட அதிக குற்றமுள்ள கெந்தியும் சேர நாகமுண்டாகும்.

7.சுத்தமான இரசமும் தாளகமும் சம அளவில் சேர வெள்ளி உண்டாகும்.

Share:

HYDRARGYRUM - பாதரசம் (MERCURY)


 பாதரசம் 
 HYDRARGYRUM  -  (MERCURY) 







             மலைகளில்   உள்ள   இயற்கை  சூழ்நிலையால்  மோதல்கள்  உண்டாகும்.  அப்போது  நிலத்தில்  பல  மைல்கள்  ஆழத்தில்  உள்ள தீக்குழம்பு  கொதித்துக்  குமுறி  எரிமலையாக  வெளிவரத்  தொடங்குகிறது  அப்போது  பூகம்ம்  உண்டாகிறது  பூகம்பம்  உண்டாகி  எரிலைத்  தீ  வெளிவந்தவுடன்  நிலத்தின்  குமுறல்  அடங்குகிறது  எரிமலையில்  வெடித்துச்  சிதறிய குழம்புகள்  கொதிக்கும்  நீராக நிலத்தில்  வந்து  தேங்குகின்றது,  அதன்  நடுவிலிருக்கும்  பகுதிகள்  ஆவியாக மாறி  குளிர்ந்தவுடன்  சில வகைப்  பொருட்கள்  கிடைக்கின்றன.  அப்படிக்  கிடைப்பதுதான்  பாதரசம்!  இது  பாதரசமாகவோ  லிங்கமாகவோ  ககிடைப்பதாக  கூறுகின்றனர்.

            ஸ்பெயின்,  கலிபோர்னியா,   இத்தாலி,   ரஷ்யா,  சைனா,  ஜப்பான், முதலிய  நாடுகளில்  இது  கிடைக்கிறது.  இந்தியாவில்  லிங்கத்தில்  இருந்து  வாலை  ரசமாகப்  பிரித்து  எடுக்கப்படுகிறதாம்.

       பொதுவாக  செந்நிறமுடையது   ரசம்,  கருமை  நிறமுடையது  இரசேந்திரன்  மஞ்சள்  நிறமானது  சூதம்.  பல  நிறமுள்ளது  மிச்ரம்  வெள்ளையானது  பாதரசம்  என ஐந்து  வகையாகச்  சொல்லப்படும்.

        இது  அறுசுவைகளையும்  கொண்டது.  குறிப்பாக  இனிப்புச்  சுவை  உடையது.   இது  எந்தப்  பொருளின்  துணையும்  இல்லாமல்  தனித்தே  செயல்படக்  கூடியது.

            வெப்பம்,  சீதம்  ஆகிய இரண்டு  வீரியங்களையும்  உடைய இதை  எந்த  துணை  மருந்தோடு  சேர்த்துக்  கொடுக்கிறோமோ  அதன் தன்மையை  பெறுகிறது.

        ரசத்தை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து அரைக்கும் பொழுது  நீர்போல்  கலப்பதை  'ஜலகதி'  என்பர்.  அழுக்காக  பிரிந்து   நிற்பதை  'மலமதி'  என்பர்.  எத்தனை  தடவை  அரைத்தாலும்  கலவைப்  பொருளை  விட்டுப்  பிரிந்து  நிற்கும்  நிலையை  'ஹம்சக்தி'  என்பர்.  எரிக்கும்  பொழுது  ஆவியாகும்  நிலை  'தூமகதி'  என்று  சொல்லப்படுகிறது.

             காரம்,  சூதம்,  புண்ணியம்,  கற்பம்,   சாமம்,  சத்துக்குரிய விரோதி,  சாதி,  சூத்திரன்,  துள்ளி,  ஈசன்,  வீரியம்,  சூழ்ச்சி,  நீர்,  விண்ணி நீர்,  வீண்  மருந்து  ரதம்,  சுக்கிலம்,  போகம்,  ஞானம்,  சுயம்புரு,  வண்டு,  நாகம்,   இலக்கியம்,  விஜயம்,  வேகம்,  மூலம்,  சிந்தூரம்,  சிந்து,  பக்கிரம்,  பதிணெண்பத்தி,  பாரதம்,  கனல்,  பூதம்,  இனிமை,  சிவசக்தி,  வருணத்தோன்,  தனிமை,  சங்கரன்  விந்து,  பனிமை,  பராபரம்,  பாய்ந்திடு தூமம்,  கனிமை,  சரக்கிற்  கலந்திடு  சீவன்,  சிவன்  விந்து,  காவன்,  சிதறிக் காண்போன்,  கேசரி,  வேந்தன்,  பாவன்,  அந்தர கந்தன்,  ஆதி,  வராட்டியன்,  சுந்தரம்,  சொற்குறி,  தூமம்,  மதாமரம்,  மந்தரம்,  மஞ்சி,  மாருதம்,  மகிபன்,  விந்தரமசிலை,  கணவன்,  மலைக்குறவன்,  வாசுகி நாதன்,  கந்தன்,  காவக்குடியோன்.  சிவம்,  விந்து,  வஞ்சகம்,  மனவேகி,  கமலினி,  மகாதேவபலம்,  அரவீரியம்,  ரௌத்ரகாரம்,  கந்தம்,  சாறு   என்கின்ற  அநேக பெயர்களால்  இலக்கியங்களில்  குறிப்பிடப்படுவதிலிருந்தே  இதன் பெருமையை உணரலாம்.

             தாது, தாவர, உயிர்ப்பொருட்கள் அனைத்திலும் உள்ள குணங்களை விட ஒப்புவமை இல்லாத தனிச்சிறப்பு பாதரசத்திற்கு உண்டு. இயற்கை அளித்துள்ள அற்புத சரக்கு இது.

         பாதரசத்தை வேதியியல்படி எவன் ஒருவன் பக்குவப்படுத்தக் கற்றுக் கொண்டு விடுகின்றானோ அவனால் எல்லா உலோகங்களையும் செயற்கையாக உருவாக்க  முடியும்.

    இரசவாதத்தில் பாதரசமும் கெந்தகமுமே தலையாய இடத்தை வகிக்கின்றன.

  வேறு சில பொருட்கள் சில நோய்களுக்கு சிறப்பாக சொல்லப்பட்டிருந்தாலும்  வேறு  சில  நோய்களுக்கு  கொடுக்கக்  கூடாதென  மறுக்கப்பட்டுள்ளன.  சீதளத்தில்  உண்டாகும்  நோய்களுக்கு  பயன்படும்  மருந்துகள்  வெப்பத்தினால்  உண்டாகும்  நோய்களுக்கு  பயன்படாது.

            உள்   மருந்தாகப்   பயன்படுத்தப்படும்   சில   மருந்துகள்  வெளி  மருந்தாகப்  பயன்படுத்த இயலாது,  ஒன்றிற்கு  நன்மை  தருவது  மற்றொன்றிற்கு  தீமை  தரும்.  ஆனால்  இரசமோ  அப்படிப்பட்டதல்ல,  சீதளம்,  வெப்பம்  மட்டுமின்றி,   உள்,  வெளி  மருத்துவ  முறைக்கும்  பயன்படும்.  இது  எந்த வீரியங்களில்  உள்ள பொருளோடு  சேருகிறதோ  அந்தப்  பொருளின்  வீரிய்த்துடன்  சேர்ந்து  வலிமை  உண்டாக்கும்  எதிரிடையான வீரியத்துடன்  உள்ள பொருட்களுடன்  சேரும்பொழுது  தனது தனித்தன்மையையும்  விட்டுவிட்டு  அந்தப்  பொருளின்  தன்மைக்கு  ஏற்றபடி  மாறிவிடும்.


"வழிநோய்  கிரந்திகுன்ம மெய்ச்சூலை  புண்குட்

  டழிகாலில்  விந்துவினா  லத்தை - வழியாப் 

  புரியும்விதி  யாதும்  புரியுனோ  யெல்லா

  மிரியும்விதி  யாது  மிலை."


       கண்  நோய்,  கிரந்தி,  எண் வகைக்  குன்மம்,  சூலை, தொழுநோய்  முதலியன போக்கும்.

நட்புச்  சரக்குகள்:

       அப்பிரகம்,   காரீயம்,   சிலை,   கெந்தி,   வீரம்,   தாளகம்,  தொட்டி பாஷாணம்,  வெள்ளி,  செம்பு,  துருசு,  சாரம்,  காரம்,  துத்தம்,  தீமுருகல்,  பவளப்புற்று,  அஞ்சனக்கல்  முதலியவை  நட்புச்  சரக்குகள்.

பகைச்  சரக்குகள்:

        சிங்கி,  கௌரி,  வெள்ளை,  குதிரைப்பல்,  சத்திச்சாரம்,  வெடியுப்பு,  இரும்பு,  காந்தம்,  சூடன்,  பூரம்,  பொன்னம்பர்,  கற்சுவரு,  நிமிளை,  பூநீறு  ஆகியவை  பகைச்  சரக்குககள்  ஆகும்.

            தற்போது  நவீன முறைப்படி  வாலை  முறையில் ( Distillation ) பாதரசம்  கிடைக்கிறது.

            இயற்கையாகத்  தாதுப்  பொருளாகக்  கிடைக்கும்,  இலிங்கத்திலிருந்து  கிடைக்கும்  இரசமே  சுத்தி  செய்த இரசத்திற்கு  ஈடானது.


Share:

தங்கம் (AURUM)

தங்கம் (AURUM)










                   செயலிலும் மதிப்பிலும் உயர்ந்தது தங்கம். உலோகங்களின் மன்னன் என்று பெருமையுடன் சொல்லப்டுகிறது. இயற்கையாக கிடைப்பது குறைவாக இருப்பதாலும் பல்வேறு சாயன்கள் இருப்பதாலும் இதன் விலை மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

             காய்ச்சினால்  சிவக்கும்,  வெட்டினால் வெளுக்கும். உரைத்தால் குங்குமப் பூ நிறமடையும், பாரமுள்ளதும் மழ மழப்பு, மெது தன்மை, மினுமினுப்பு உள்ளதும் தளமாகப் பிரியாமல் உள்ள தங்கமே சிறந்தது.

                    வெளுத்து வரண்டு, நிறம் குன்றி அழுக்குடனும், அடித்தால் தகடாகப் பிரிந்தாலும், உரைத்தாலும் காய்ச்சினாலும் வெளுத்துப் போகின்றதுமான தங்கம் நல்லதல்ல.

        ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூந்தம் என நான்கு வகைகள் தங்த்தில் உள்ளதாக கூறுகின்றனர். மற்ற எல்லா வகை பற்ப மருந்துகளும் வெள்ளை ண்ணத்திலும், செந்தூரங்கள் சிவப்பு வண்ணத்திலுமே இருக்கும், ஆனால் தங்கம் மட்டும் அதே பொன் வண்ணத்திலேயே இருக்கும்.

          பொன் சேகரிப்பவர், பொன் கலந்த மண்ணை பரந்த ஓடுகளில் இட்டு நீருடன் கலந்து, சுழற்றிக் சுழற்றிக் கொட்டுவர். பொன் கனமான பொருள் ஆகையால் மண்ணும் மணலும் நீருடன் கலந்து போகும் பொன் அடியில் நின்றுவிடும். பொன் பொடியையும் மற்ற நுண்ணிய பொடியையும் இப்படியாக பிரித்தெடுப்பார்கள். அதிலிருந்தும் அதிலிருந்தும் பொன்னைப் பிரித்தெடுக்க சிறந்த முறையாக கையாளப் பட்டதே புடமிடுதலாகும்.

     பொற்கலவையை உருக்கி நீட்டித்  தகடாக்கி குறிப்பிட்ட அளவு துண்டுகளாக தகடை புளி நீரால் களுவுவார்கள், பிறகு உப்பும், இரும்பும் கெந்தகமும் கலந்த செங்கற் பொடியில் இட்டு புரட்டுவார்கள். இரண்டு ஓட்டுச் சில்லுகளிடையில் வைத்துக் கீழே காற்றுப் புகும் தொளையுடைய அகன்ற சட்டி அல்லது ஓட்டில் வரட்டியின் அனலிடையே பல மணி நேரம் வைப்பார்கள். இப்படி நாற்பத்தியொருமுறை புடமிட்டால் பொன் கலவை மாசு நீங்கி பத்தரை மாற்று பொன் ஆகுமென்பர்.

                 இக்காலத்தில் மின் சக்தியைக் கொண்டு பெரும்பாலான வேலைகளை எளிதாக செய்கின்றனர். சுரங்கங்களில் உடைத்தெடுத்த பாறைத் துண்டுகளை ஆலையில் உள்ள அரவை இயந்திரத்தில் பொடி ஆக்குகின்றனர். வேகமாக ஓடுகின்ற நீர்க் குழாய்களில் அப்பொடி இழுத்துச் செல்லப்டும்.

         பொன் பொடி கலந்த நீரில் ஓடும் வழியில் பாதரசம் பரப்பிய பலகை இருக்கும் மணலிலுள்ள பொன் பொடிகளின் ஒரு பகுதி பாதரசத்துடன் சேர்கிறது. இந்தக் கலவையை உஷ்ணப்படுத்தி பாதரசத்தை தனியாகவும் தங்கத்தை தனியாகவும் சேகரிக்கின்றனர்.

      குழாய் வழியாக  செல்லும் பொன் பொடிகள் மயிர்க்கால் அளவு துளையுள்ள மெல்லிய சல்லடைகளில் அடிக்கப்படுகிறது. அவைகளை உலர்த்தி பொடிகளை உருக்குவர்.

            இந்த இரண்டு முறைகளிலும் தப்பிச் செல்லும் நுண்ணிய பொடிகளை தண்ணீரில் கரையக்கூடியதும், தங்கத்துடன் கலக்கக்கூடியதாகவும் உள்ள 'ஸயனைடு' என்கின்ற பொருளின் உதவியால் பிரித்தெடுக்கின்றனர். துத்தத்தின் மீது பொடியாய்ப் படிந்துவிடும்.

              இந்த மாதிரி மூன்று முறைகளில்  தங்கம் பிரித்தெடுக்கப் படுகிறது. இது ஓரளவு தரம் குறைவாகவே இருக்கும். தனித்தோ மற்ற பொருட்களுடன் கலந்தோ உருக்கப்படும் பொழுது தரத்தில் மாற்று உயரும்.

        தங்கத்தின் ஒப்ப எடை எண் (Specific Gravity) 19.32 ஆகும். 35.25 செ.மீ நீள அகல உயரமுடைய பொற்கட்டி ஒரு டன் எடை உள்ளதாக இருக்கும்.

     தங்கத்தின் தனிச்சிறப்பும் பெருமையும் கூடுவதற்கு முக்கியமானது, மினுமினுப்பும் எளிதில் பளபளப்பு கெடாத தன்மையும் ஆகும்.

    பொன்னின் இயற்கை நிறம் மங்கிய  பசுமையான மஞ்சள் நிறம். காற்றிலுள்ள உயிர்க் காற்றுடன் கலந்து களிம்பு பிடிக்காது.

             தங்கத்தில் வெள்ளி கலந்தால் பசுமையாகியும், வெளிறியும் தோன்றும். செம்பு கலந்தால் பழுப்பும் செந்நிறமும் அதிகமாகும். சுரங்கங்களில் பொன் உருகி ஓடும்போது பச்சைப் பசேலென ஒளி வீசுவது அதில் கலந்த வெள்ளி, துத்தம் முதலியவற்றாலேதான்.

          எல்லா  திடப்  பொருட்களும்  அமிலங்களில்  கரையும் தன்மை  உடையவை ஆனால் தங்கம் மட்டும் அமிலத்தில் கரையாது.

          தங்கத்துடன் எளிதில் சேரும் பொருட்கள் அரச நீரகம் (Agua Regia), பாதரசம், ஸயனைடு ஆகிய மூன்றாகும். உயர் வெப்ப நிலையுடைய இரு வகை அமிலங்களில் (Selleric Acid, Telluric Acid) கரையும் என்று சொல்லப்படுகிறது. கந்தக அமிலமும், நைட்ரிக் அமிலமும் கலந்த கலப்பு திராவகத்தில் போட்டு உஷ்ணப்படுத்தினால் கரையும்.

         ஒரு கிராம்  தங்கத்தை  கிட்டத்தட்ட  இரண்டரை  கிலோ  மீட்டர் தொலைவு நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியும் என்கின்றனர்.

        தங்கத்தின் தரத்தையும் மதிப்பையும் நம் நாட்டில் 'மாற்று' என்று சொல்வர். நல்ல தரமான தங்கம் 'பத்தரை மாற்றுப் பொன்' எனப்படும். கலப்புத் தங்கம் மாற்றுக் குறைந்தது எனப்படும். உரை கல்லில் வைத்து உரசிப் பார்த்து இதன் தரத்தை அறிகின்றனர்.

         தற்போது வேறு முறையிலும் துல்லியமாக அறிகின்றனர். 24 Carat சுத்தமான தங்கம் இது மிக எளிதாக வளையவும் நசுங்கவும் கூடியது. அதனால் தங்க நகைகள் போன்றவற்றை செய்வதற்கு சற்று மாற்று குறைந்த 22 Carat தங்கம் பயன்படுத்துகின்றனர்.

" அடற்றா வரவிடங்க ளங்கவொளி மங்கல் 

   கடந்தாமுந் தோடகயங் காச -- முடற்பஞ் 

   சேகையிருந் தாதுநட்டந் திட்டிநோ யீளையிவை 

   யீகைபிருந் தாலேகு மென். "

          வெப்ப  வீரியமும்  இனிப்புச்  சுவையும் இருந்தாலும் மற்ற இனிப்புச் சுவை பொருட்கள் போல் கபத்தை கூட்டாது.

          தாவர விஷங்கள், உடலில் ஒளிக் குறைவு, சன்னி, இளைப்பு நோய், காசம், உடல் வெப்பம், முதிர்ந்த கபம், தாது நட்டம், கண் நோய், கோழைக்கட்டு போக்கும்.

         மாசை மீதகம், பீதம் மாடை, மாடு வேங்கை, ஆசை, சுவணம், காரம், அருத்தம், காஞ்சனம், காணம், தேசிகம், கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், தனம், உடல், பண்டம், இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஓமம், சந்திரம், சாம்பூந்தம், பூரி, ஈழம், திரவியம், சாதரூபம், செங்கோல், நிதானம், மாழை, அரி, தடனியும், தமனியம், ஆடகம் என்ற பல பெயர்களால் இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

         இரச காரசாரங்கள் நட்புச் சரக்குகள் ஆகும். முட்டை ஓடு, அப்பிரகம், கெந்தகம், காந்தம், குதிரைப் பல் பாஷாணம், கோமுகப் பாஷாணம், கௌரி பாஷாணம், சவுட்டுப்பு, மிருதார் சிங்கி, மனோசிலை, சூதம், தாளகம், நாகம், நிமிளை, பொன்னம்பர், வீரம், வெடியுப்பு, வெள்ளைப் பாஷாணம், வங்கம், துருசு, லிங்கம் முதலியன பகைச் சரக்குகளாம். 


Share:

வெள்ளி(ARGENTUM)


 வெள்ளி 
(ARGENTUM)












     இது இயற்கையாக பூமியில் விளைகின்ற உலோகம். பெரும்பாலும் பிற தாதுப் பொருட்களுடன் கலந்துதான் கிடைக்கின்றது. சில சமயங்களில் கெந்தகம், ஈயம், தங்கம், தாமிரம் முதலியவைகளுடன் கலந்தும் இருக்கும். இந்தக் கலப்புத் தாதுக்களிலிருந்து வெள்ளி பிரித்தெடுக்கப்படுகின்றது.
வெள்ளியின்  நிறம்  வெண்மை  ஆனால் சிறிது சிவப்பு நிறமும் உண்டு. இது எளிதாகக் கண்ணுக்குப் புலப்படாது. அதிக மிருதுத் தன்மையும், நைப்பும் உடையது. ஆகையால் மிக மெல்லிய கம்பியாக இழுக்கவும், தகடாக அடிக்கவும் முடியும்.






     வெள்ளி  தாமிரத்தை  விட  அதிக  மிருதுவானது.   எளிதில் உருகக் கூடியது. மின் அதிர்வைத் தாங்குவதிலும், சூட்டை வாங்குவதிலும் இது ஒப்பற்றது. இது உருகும்போது பிராண வாயுவை இழுத்துக் கொள்ளும். ஆறியவுடன் அந்த வாயுவை விட்டு விடும். இது கெந்தகத்தை அதிகமாக இழுத்துக் கொள்ளும். அதனால் காற்றில் இது கெடாவிட்டாலும் இலேசாகக் கருத்து விடுகிறது. வெளிக்காற்றில் உள்ள கெந்தகச் சத்தை இழுத்துக் கொள்வதே இதற்குக் காரணமாகும்.
வெள்ளியைக் கரைப்பதற்கு வெடியுப்புத் திராவகமே மிகவும் பயன்படும். கெந்தகத் திராவகத்தினால் வெள்ளியைப் போட்டுக் காய்ச்சினால் கரைந்துவிடும்.

     வெள்ளி அதிக மிருதுவாக இருப்பதால் சீக்கிரம் தேய்ந்துவிடுகிறது. அதனால் ஏழரை முதல் பத்து சதவீதம் தாமிரத்தைச் சேர்த்து நாணயங்கள், சிலைகள், விளக்குகள் செய்கின்றனர். சொன்ன அளவைவிட அதிகமாக தாமிரத்தைச் சேர்த்தும் செய்வதுண்டு.
அரண்பதி, இராதம், இரசிதம், களதவுதம், சுல்லு, சுக்கிரன் துய்யான், தாரம், வெண்தாது, வெண்பொன், மதுரைப் பொது என பல பெயர்கள் இதற்குண்டு.
வெள்ளிய உண்ணுகின்ற கலமாக உபயோகித்து வந்தால் மனக்களிப்பு உண்டாகும். சிலேத்துமக் கோபம், பித்தக் கோபம் முதலியவை நீங்கும். வெள்ளிக் குவளையில் மதுபானத்தை குடித்தால் மிக. விரைவில் மயக்கம் உண்டாகும்.

    அதிக புளிப்பும், குறைந்த துவர்ப்பும், இனிப்புச் சுவையும், சீத வீரியமும் கொண்டது. இது சிறு குடலுக்கு ஒவ்வாது.

" பாய்க்கூட்டங் காட்டாப் யழையசுரந்  தாருவிடம்
   வாய்க்கூட்டச் செய்மேக. வாதமுத--னோய்க்கூட்ட
   மண்டாது காணிகொளு மத்திமே கக்கசிவும்
   வெண்டாது காணிமெய்யை மேல்."

   பைத்தியம், மனக்கலக்கம், வாய்நாற்றம், வாயிலிருந்து கெட்ட நீர் வடிதல், இருமல், மார்பு துடித்தல் முதலிய நோய்களைத் தீர்க்கும்.
இரைப்பை, ஈரல் முதலியவைகளை பலப்படுத்தும். உடலில் உள்ள தீய நீர்களை விரட்டும். இதனை மேற்பூச்சாகப் பூசுவதால் உடம்பின் மேலுள்ள வீக்கம் குணமாகும்.

     இதைக் கண்பொடியாச் செய்து வெள்ளிச் சலாகையால் கண்ணிலிட்டு வர மெல்லிய கண் பூக்கள் தீரும். கண் பார்வையைப் பலப்படுத்தும். உடலுக்குப் புத்துணர்வு கொடுத்து அறிவிற்கு வலிமையைத் தரும்.
வெள்ளியைக் காய்ச்சினால் சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பாகத் தோன்றுவதும், வரண்டு வெடித்து கனமில்லாமல் இருப்பதும் பயனளிக்காது.

     அயம், நாகம் இவற்றின் நட்பு பகைச் சரக்குகளே இவற்றிற்கும்.


Share:

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7