We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Saturday, April 28, 2018

Can You Turn Lead into GOLD?

Can You Turn Lead into GOLD?




         இந்த வீடியோவை பார்த்திருப்பீர்கள் இதுதான் தற்போதைய அறிவியல் இது இந்த வீடியோவில் சொல்வது எந்த அளவு சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நமது தமிழ் இரசவாத அறிவியலின் பெருமை  புரியும்படி விரைவில் நான் கூறுவேன். விரைவில் என்றதும் உடனே எதிர் பார்க்கவேண்டாம் இது எளிதான காரியம் அல்ல அதற்கு கால தாமதம் ஆகும். 



Share:

Turn Lead into Gold!


Turn Lead into Gold! || MinuteLaboratory #4





Share:

Sunday, April 8, 2018

MERCURY LINGAM

சுமார் 11 கிலோ எடையுள்ள பாதரச லிங்கம்

சுமார் 1 கிலோ எடையுள்ள பாதரச லிங்கம்

Share:

MERCURY NANTHI

பாதரச நந்தி

Share:

இரசமணி

இரசமணி 

 ஒரு மணி சுமார் 10 கிராம் எடை



Hover over the image:

Pineapple
Share:

Saturday, April 7, 2018

இரசவாதம்

இரசவாதம்

''உப்பை யறிந்தவ னேவா திசகத்
  துப்பை யொழிந்த வனே யோகி
  தப்பிலை யேபூமி நாத மகிமையைச்
  சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே!
  வீட்டி லிருக்குதொரு மூலம் வெளிக்
  காட்டிலிருக்கு திருமூலம்
  மாட்டி லிருக்கும் பெரியோர்க்கு
  ரசவாதமி தல்லவோ ஞானப்பெண்ணே!''

                               -மதுரை வாலைசாமி ஞானக்கும்மி.
Share:

வாத யோகம்

வாத யோகம்
"உண்ணவே மவுனரச வாத யோகம்
  உத்தமனே வானிரச வாத தாது
  விண்ணுறையும் யோகரச வாதத்திற்கு

  விந்து நாதப் பொருளை விளம்பக்கேளு
  தன்னிரையும் தாது ரசவாதத்திற்குச்
  சதுரான லவணமதே விந்து நாதம்
  பண்ணரிய விரண்டிற்கும் பேரொன்றாகும்
  பாடையினாலுவமானம் பற்றி பாறே
  பாரப்பா விரண்டிற்கு மொரு பேரிட்டு
  பாடினா ருவமானப் பாடையாலே
  வாரப்பா தாது விந்து வழலைக்கும் பேர்
  மவுனமென்ற வாசியோக வாழ்க்கைக்கும் பேர்
  ஆரப்பா விதையெடுத்ததிலே சொல்வார்
  அதையெடுத்ததில் புகட்டியது வாமென்பர்
  கூறப்பா நாதவிந்து முடித்த பேர்க்குக்
  கூச்சமற்ற ஞானமெனும் பொருள் தான்வாய்க்கும்
  சாரப்பா லவணவிந்துபூமி நாதம்
  
  தமையறிந்து முடித்தவர்க்கு தங்கமாமே"
--(அகத்தியர் பரிபாஷை திரட்டு 500--முதல் காண்டம்)


Share:

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதமும் மூலிகையும்

     இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம். 

1.ஓரிதழ் தாமரை      -    கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை         -    பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு             -     இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி        எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை           -    வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி       -    பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.
Share:

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்
              
         இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.

1.அஞ்சனக்கல்                                     -   அயத்தைப் பற்பமாக்கும்.
2.அப்பிரகம்                                                          -   பாதரசத்தைக் கட்டும்.
3.அரிதாரம்                                           -     வங்கத்தை நீற்றும், கட்டும்.
4.கற்கடக சிங்கி பாஷாணம்            -     நாகத்தை செந்தூரமாக்கும்.
5.கல்பாஷாணம்                          -  காரீயத்தைக் கட்டும்.
6.கார்முகில் பாஷாணம்                  -   அரிதாரத்தைக் கட்டும்.
7.கெந்தி பாஷாணம்                          -   இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.
8.கோளக பாஷாணம்                       -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.
9.கௌரி பாஷாணம்                         -   சூதத்தை செம்பாக்கும்.
10.சங்கு பாஷாணம்                          -   சூதத்தை செம்பாக்கும்.
11.சிலாமத பாஷாணம்               -   செம்பை வெள்ளியாக்கும்.
12.பாதரசம்                                -  காந்தத்தை ஈயமாக்கும்.
13.தாளம்பக பாஷாணம்                -    நாகத்தை தங்கமாக்கும்.
14.துத்தம்                                           -  தாளகத்தை வெள்ளியாக்கும்.
15.தொட்டி பாஷாணம்                   -   நாகத்தைச் செம்பாக்கும்
16.மனோசிலை                                -   ரசத்தைக் கட்டும்.
17.இலிங்கம்                                     -  செந்தூரத்திற்கு ஆதி.
18.வீரம்                                              -  காரீயத்தைச் செம்பாக்கும்.
19.வைக்கிராந்தப் பாஷாணம்      -  நவலோகங்ளையும் நீற்றும்.
20.அயத்தொட்டிப் பாஷாணம்     -   களங்குகளுக்கு ஆதி.
21.இரசித பாஷாணம்                -    நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.
22.காக பாஷாணம்                         -    தாரத்தை கறுப்பாக்கும்.
23.கெந்தக பாஷாணம்             -  ரசத்தை செந்தூரமாக்கும்.
24.சவ்வீரம்                             -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.
25.துத்தம்                                        -   தாரத்தை நீற்றும்.
26.நாக பாஷாணம்                       -  நாகத்தை தங்கமாக்கும்.
27.நீலக்கல் பாஷாணம்              -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.
28.மிருதார் சிங்கி                   -   இரசத்திற்கு ஆதி.
29.வெள்ளைப் பாஷாணம்         -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.
30.வங்க நீரால்                              -  கெந்தகத்தைக் கட்டலாம்.
31.கருவங்க நீரால்                       -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.


Share:

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்.

1.துரிசு                                                 -   இரசத்தைக் கொல்லும்.
2.பொன் நிமிளை                             -   தங்கத்தை சுண்ணமாக்கும்.
3.கஞ்ச நிமிளை                               -   வெண்கலத்தை சுண்ணமாக்கும்.
4.உலோக நிமிளை                         -    இரும்பை குருவாக்கும்.
5.காக நிமிளை                                  -    தராவைச் சுண்ணமாக்கும்.
6.முத்துச் சிப்பி                                 -    நவச்சாரத்தைக் கட்டும்.
7.அஞ்சனக்கல்                                 -    சரக்கெல்லாம் ஈயமாக்கும்.
8.இராசவர்த்தக்கல்                        -    நவலோகத்தை வேதையாக்கும்.
9.நண்டு                                                -    சூதத்தைக் கட்டும்.
10.கிளிஞ்சல்                                      -   வங்கம் பாஷாணம் முதலியவைகளின் 
                                                                      தோசத்தைப் போக்கும்.
11.யானைக் கொம்பு                        -   வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.
12.பன்றிக் கொம்பு                            -   வீரம் குருவாகும்.
13.மாட்டுக் கொம்பு                          -   பாஷாணம் செந்தூரமாகும்.
14.முத்து                                               -   இரசத்தை மணியாக்கும்.
15.பவளம்                                             -   இரசத்தை ஏமமாக்கும்.
16.சூடாலைக்கல்                              -   நவலோகங்கள் செந்தூரமாகும்.
17.மஞ்சட்கல்                                     -   கெந்தகம் செம்பாகும்.
18.மாக்கல்                                           -   தாளகம் ஈயமாகும்.
19.சிலாவங்கம்                                  -   பாஷாணம் பற்பமாகும்.
20.அன்னபேதி                                    -   இலிங்கம் மெழுகாகும்.
21.சொர்ணபேதி                                 -   நவலோகத்தையும் தண்ணீராக்கும்.
22.உவர்மண்                                       -   தாது பற்பமாகும்.
23.கருமணல்                                      -   தங்கத்தை குருவாக்கும்.
24.செம்மண்                                        -   காரீயம் செம்பாகும்.
25.சுத்தமண்                                        -    அயம் செம்பாகும்.
26.பன்றி முள்                                     -   இரசம் வெண்மையாகும்.
27.எலி முள்                                        -    வீரம் செம்பாகும்.
28.மீன் எலும்பு                                  -    கௌரி பாஷாணம் ஈயமாகும்.
29.முள் சங்கு                                     -   வெள்ளை ஈயமாகும்.
30.நாகப்பச்சை                                   -    உருக்கு செம்பாகும்.
31.மரகதப் பச்சை                             -   அயம் செம்பாகும்.
32.வெள்ளை சுக்கான் கல்             -   வெள்ளீயம் வெள்ளியாகும்.
33.காகச் சிலை                                  -    காந்தம் செம்பாகும்.
34.மந்தாரச் சிலை                            -    சூடன் செம்பாகும்.
35.சாலக் கிராமம்                              -    தங்கம் செம்பாகும்.
36.மாந்துளிர் கல்                              -    கெந்தகம் செம்பாகும்.
37.முட்டை                                           -    வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.
38.கற்களி                                              -    வெள்ளீயம் செம்பாகும்.
39.செம்பு மணல்                                -    சவ்வீரம் செம்பாகும்.
40.நாக மணல்                                     -    இரசம் செம்பாகும்.
41.காரீய மணல்                                 -    இலிங்கம் செம்பாகும்.
42.உலோக மணல்                             -    மனோசிலை செம்பாகும்.
43.கடுஞ்சுக்கான்                                 -    குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.
44.நாகச்சிலை                                     -     நவலோகம் செந்தூரமாகும்.
45.ஏம சிலை                                         -    பாஷாணங்கள் செந்தூரமாகும்.
46.காரியச் சிலை                                -     பச்சை கற்பூரம் செம்பாகும்.
47.வெண்கலச் சிலை                        -     வெடியுப்பு செம்பாகும்.
48.செம்புச் சிலை                                 -    கல்லுப்பு செயமாகும்.
49.ஆட்டுக் கொம்பு                              -    உப்பெல்லாம் சுண்ணமாகும்.

Share:

இரசமணி

இரசமணி


"வெந் தணலில் ரசம்வைத்து ஐந்து லோகத்தையும்
  வேதித்து விற்றுண்ணலாம்
  வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்

  விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
  சந்ததமும் இளமையோ டிருக்கலாம்
  மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்.
"

                                                                               - தாயுமானவர்

Hover over the image:

Pineapple
Share:

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7